Jan 4, 2016

19. The divine mediation. #Tiruppavai #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

குணங்கள் ஐந்தாம் மென்மை,மணம்,
தண்மை,அழகு, வெண்மை நிகரான
நுண்ணிய பொருள் ஐந்தாம் துளிர் மலர்
இணைந்த போர்வை,பட்டு,பஞ்சுதுயிலணைமீது
நறுமலர் சூடிய நப்பின்னையை அணைத்த
உறக்கம் கொள் பரந்த மார்புடைய நாயகனை

பண்டொருநாள் காகாசுரன் கூர் அலகால்
புண்பட்ட பிராட்டி காத்த அமைதிபோல்
ஈரைந்து முகத்தினன் ஈனனின் சீற்றம்
கோரைப்புல்லாய் மதித்து பொறுத்ததுபோல்

மொழியாது மௌனமாக ஆற்றும் செயல் இவள்
எழிலுருவிற்கும்,பண்பிற்கும் ஒத்தவில்லை அன்றோ?