Dec 26, 2017

Tiruppavai 11 #watercolour #KrishnaforToday
The guru gathers knowledge from various sources and the essence is taught to the disciple. The disciple is like a creeper which clings to the support - the wisdom of the guru.


2 comments:

Anonymous said...

Great and Beautiful!!!

Kalpakam said...

செவியில் விழுந்தது கோதையின் அறைகூவல்
தொடர்ந்தேன் -பறந்தேன் -ஒலி வந்த திசை நோக்கி

"கன்றுகள் கறவைப் பசுக்கள் நாடும் கூட்டம் போல
கொழுகொம்பை நாடிப் படரும் கொடிகள் போல
குருவைக் குடும்பத்துடன் நாடும் சீடர்கள் போல
குற்றம் ஒன்றில்லாத மரபில் தோன்றிய குலமணியே !!

அரவம் படமெனப் புருவமுடைய
கருமை நீண்ட கூந்தலாளே !!
கருமுகில் கண்டு ஆடும் மயிலென்
கருநீலவண்ணன் நாமம் கேட்ப்வளே !!

பரமனின் சுகானுபவம் நன்கு செவியுற்றும்
உறக்கத்தில் அசையா உன் செயகை என்ன?
நண்ணிவந்த எம்மையெல்லாம் பாராமல்
தள்ளிவிடாது நோன்பில் சேருவாயாக "

கண்டேன் துள்ளி குதிக்கும் கோதை
தொடர்ந்தேன் நானும் சிறகடித்து