tag:blogger.com,1999:blog-13491481.post3272487544770627650..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-81170282804846706472016-01-21T18:16:39.188+05:302016-01-21T18:16:39.188+05:30 புனித சுடரொளி இருளில் சூழ
நன்னல சோதியாய் மாறி சுழ... புனித சுடரொளி இருளில் சூழ<br />நன்னல சோதியாய் மாறி சுழல<br />சங்கு,சக்கரம் ஏந்திய கரமிரண்டு<br />செங்கமலம்,கதையுடன் கையிரண்டும்<br /><br />ஒளிரும் மகுடம் மிளிரும் நுதல் திலகம்<br />பெரு இரு விழி ஊற்றென பொழி கருணை<br />நாதமோடு இழையும் பண் கீதமென<br />இதழூடு இணைந்த இளமென் புன்னகை<br /><br />திண்தோள்கள் அணிந்த தோள்வளைகள்<br />முரண்படு கரு மார்புத் தழுவும் மாலைகள்<br /><br />மெய்சிலிர்த்து கைகூப்பினாள் அன்னை தேவகி<br />தன்னெதிர் அமுதமெய்பொருளாய் நிற்கும்<br />அரங்கனாய் காட்சி தந்த உம்மைக் கண்டு<br />வேண்டினாள் பால்மணம் மாறா பாலகனாய் மாற<br />சிறையில் உதித்த நீர் மறைவிடம் சென்றீர்<br />மறலி யாய் தொடரும் கம்சனுக்கு கூற்றனானீர்<br /><br />தயிர்கடையும் தருணமதில் காலை<br />யசோதை அன்னை கழுத்தணைத்து<br />உயிரைக் கடைவதுபோல் குலுக்கி<br />தாழி வெண்ணெய் வேகமாய் தட்டுவீர்<br /><br />பிள்ளைப்பருவத்து உம் திருவிளையாடல்<br />பாசுரமாய் அர்ச்சித்து பாடி கூடி மகிழும்<br />எங்கள் குறை தீர்த்து உம் மார்புறையும்<br />திருமகள் தக்க செல்வமும் அருளுவீராகKalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com